HI FRIENDS

Thursday, October 31, 2019

Kitchen Tips...

சாப்பாட்டு பொட்டலம் கட்டப் போகிறீர்களா? 
சாப்பாட்டைப் பொட்டலமாக கட்டும்போது வாழை இலையை பின்புறமாகத் திருப்பி தணலில் லேசாகக் காட்டியபின்னர் கட்டினால் இலை கிழியாமல் இருக்கும்.

வெங்காயத்தை வெறும் வாணலியில் சிறிது வதக்கிவிட்டு, பிறகு எண்ணெயில் வதக்கினால் சீக்கிரம் சிவந்து வதங்கிவிடும்.

தோசை மாவு புளித்துப் போனால், அதில் அதிக அளவு தண்ணீர் ஊற்ற வேண்டும். சிறிது நேரம் கழித்து தண்ணீர் மேலே நிற்கும். அதை வடித்துவிட்டு தோசை ஊற்றினால் சூப்பர் டேஸ்ட்டாக இருக்கும்.

கமலா ஆரஞ்சு பழத் தோல்களை எறிந்து விடாமல் பத்திரப்படுத்தி வையுங்கள். தேநீர் தயாரிக்கும் போது அந்தத் தோலை துளியூண்டு கிள்ளி, தேயிலையுடன் சேர்த்து டிகாஷன் தயாரித்தால் மணம் தூக்கலாக இருக்கும்.

கேஸ் ஸ்டவ்வை சமையல் முடித்து, ஆறியபின், சுத்தமாகத் துடைத்து, டிஷ்யூ பேப்பரால் துடைக்க “பளிச் பளிச்” தான்

வாழைப்பழங்கள் வெளிபடுத்தும் வாயுக்கள் பிற பழங்களை விரைவாக பழுக்கவைத்துவிடும், ஆதலால் வாழைப்பழங்களை தனியே வைப்பது உகந்தது.

வெங்காயத்தை வெறும் வாணலியில் சிறிது வதக்கிவிட்டு, பிறகு எண்ணெயில் வதக்கினால் சீக்கிரம் சிவந்து வதங்கிவிடும்.

சர்க்கரைப் பொங்கல் செய்யும் போது அரிசியில் சிறிது நெய் கலந்து வேக வைத்தால் சுவையும் மணமும் கூடும்.

குளிர்ந்த நீரில் சில சொட்டுகள் எலுமிச்சை சாற்றை விட்டு, அதில் காய்கறிகளைப் போட்டு வைத்தால் அப்போது பறித்தது போல ஃப்ரெஷ்ஷாக இருக்கும்.

பச்சரிசியை வெந்நீரால் நனைத்து ஆப்பத்துக்கு அரைத்தால் மொறுமொறுப்பாக இருக்கும்.

இரண்டு டம்ளர் உளுந்துடன் ஒரு கரண்டி சாதம் சேர்த்து அரைத்து வடை தட்டினால், உளுந்து வடை சுவையாக இருக்கும்.

பால் அல்லது கஞ்சி ஆறினால் மேலே ஏடு படியும். லேசாக தண்ணீர் தெளித்து வைத்தால் ஏடு படியாது.

நீங்கள் வதக்கிச் செய்திருக்கும் காய்கறியில் ஒரே எண்ணெய் மயமா? கவலையே வேண்டாம். கொஞ்சம் கொள்ளு மாவைத் தூவினால் போதும். கொள்ளுக்கு எண்ணெயை உறிஞ்சும் தன்மை உண்டு.

பிரெட் பக்கோடா செய்வதற்கு முன் வெட்டி வைத்திருக்கும் பிரெட் ஸ்லைஸ்களை பாலில் முக்கி எடுத்த பிறகு பக்கோடா மாவில் போடுங்கள். அட்டகாசமான சுவை கிடைக்கும்.

கொத்தமல்லி மற்றும் புதினா நீண்ட காலத்திற்கு வாடாமல் இருக்க, அவற்றை அலுமினியம் ப்ஹாயிலில் (Aluminium Foil) சுற்றி குளிர்சாதன பெட்டியில் வைக்கவும்.

*தேங்காய் துருவலுடன், ஊறவைத்து அரைத்த வேர்க்கடலையை சேர்த்து, தேங்காய் பர்பி செய்தால், வித்தியாசமான சுவையுடன் இருக்கும்.

* தோசை மாவுடன், சிறிதளவு சோளமாவு சேர்த்து தோசை வார்த்தால், தோசையின் சுவை அபாரமாக இருக்கும்.

*இட்லிப் பொடி தயாரிக்கும் போது, சிறிதளவு கருவேப்பிலையை வறுத்து சேர்த்து அரைத்தால், ருசியாக இருக்கும்.

*தயிர் வடை செய்யும் போது வடையை பொரித் ததும், அதை சில நிமிடங்கள் தண்ணீரில் நனைத்து பின் தயிரில் போட்டால் நன்றாக ஊறும்.

*ஜவ்வரிசி பாயசம் செய்யும் போது, இரண்டு டீஸ்பூன் வறுத்த கோதுமை மாவை பாலில் கரைத்து ஊற்றி செய்தால், பாயசம் கெட்டியாகவும் ருசியாகவும் இருக்கும்.

*இட்லிக்கான அரிசியை வெந்நீரில் ஊற வைத்து அரைத்தால், இட்லி பஞ்சு போல இருக்கும்.

*முள்ளங்கி சாம்பார் செய்யும் போது, சிறிதளவு எண்ணெயில் முள்ளங்கியை வதக்கிய பின் சாம்பார் செய்தால் ருசி கூடும்.

*கட்லெட் செய்ய ரொட்டி தூள் இல்லையென்றால், அரிசியை பொரித்து தூளாக்கி பயன்படுத்தலாம்.

*வெங்காய பஜ்ஜிக்கான வெங்காயத்தை, தோலை உரிக்காமல் வட்டமாக வெட்டி விட்டு பின் தோலை உரித்தால், வெங்காயம் தனித்தனியாக பிரியாமல் வட்டமாக இருக்கும்.

* உருளைக்கிழங்கு, சேப்பங்கிழங்கு வறுவல் செய்யும்போது, மேலாக சிறிது ரொட்டி துாளை துாவினால், கரகரப்பாகவும், சுவையாகவும் இருக்கும்.

*குலோப்ஜாமுன் பாகில், ஒரு டீஸ்பூன் தேன் விட்டு இறக்கினால், உறையாமலும், சுவையாகவும் இருக்கும்.

*தோசை மாவு புளித்து விட்டால், அரை கப் பாலில், ஒரு டீஸ்பூன் சர்க்கரை சேர்த்து கலக்கி, மாவில் சேர்த்து தோசை சுட்டால், முறுகலாகவும், ருசியாகவும் இருக்கும்.

*முதல் நாள் மீந்த சப்பாத்திகளை, டப்பாவில் போட்டு மூடி, விசில் போடாமல் இரண்டு நிமிடம் குக்கரில் வேக வைத்தால், புதிதாக செய்தது போல் இருக்கும்.

*சேனை கிழங்கை வேக வைக்கும் முன், வெறும் பாத்திரத்தை அடுப்பில் வைத்து, சிறிது உப்பு போட்டு வெடிக்கும் வரை வறுக்கவும். பிறகு நீர் ஊற்றி கொதி வந்ததும், கிழங்கை போடவும். விரைவில் பதமாக வெந்து, பக்குவமாகவும், சுவையாகவும் இருக்கும்.
#கறிவேப்பிலை #சட்னி ..

தேவையான பொருட்கள்:

கறிவேப்பிலை – 100 கிராம்
பொட்டு கடலை – 1 தேக்கரண்டி
ப.மிளகாய் – 3
புளி – கொட்டைபாக்களவு
இஞ்சி – சிறுதுண்டு
உப்பு – சுவைக்கேற்ப
நல்லெண்ணெய் – 3 தேக்கரண்டி

செய்முறை :

• ஒரு வாணலியில் எண்ணெய் சூடாக்கி அதில் புளியை வதக்கி ப.மிளகாய், இஞ்சி மற்றும் கறிவேப்பிலையும் இட்டு வதக்கவும்.

• ஆறிய பின் பொட்டுக்கடலை மற்றும் உப்பு கலந்து அரைத்து கொள்ளவும்.

• இந்த இட்லி, தோசை மற்றும் உப்புமாவிற்கு தொட்டுக்கொள்ள சுவையாக இருக்கும்.

• வாரம் இருமுறை இந்த சட்னி செய்து சாப்பிடலாம். சர்க்கரை நோய், ரத்தத்தில் அதிக கொழுப்பு, தலை முடி உதிர்தல் போன்ற பிரச்சனைகளுக்கு இது ஒரு சிறந்த மருந்தாக அமையும்

Wednesday, October 30, 2019

எண்ணங்கள் அழகானால்..
சொற்களும் அழகாகும்.

ஒரு #டீக்கடையில் எழுதப்பட்டிருந்த
 வாசகம், டீயை விடவும் சூடாக இருந்தது

"இருவடை எடுத்து ஒருவடை என்பார்
திருவோடு ஏந்தி தெருவோடு போவார்..!"

மாஸ்டர் டீ போடுகிற நேரத்தில், தட்டிலிருக்கும் வடையில் இரண்டை கபளீகரம் செய்து விட்டு, ஒரு வடை தான் என்று காசு கொடுப்பவர்களை கண்டிப்பதற்காக எழுதப்பட்ட வாசகம் இது. சுவாரஸ்யமாக இருக்கிறது என்றாலும் வடை எடுக்கிற எல்லோருக்கும் இது சங்கடத்தையே ஏற்படுத்தும்.

இதைப் படிக்கும்போது உங்களுக்குள் ஏற்படும் மன உணர்விற்கும், இனி வரும் வரிகளை படிக்கும்போது ஏற்படும் மன உணர்விற்கும் உள்ள வித்தியாசத்தினை கவனியுங்கள்.

ஒரு ஆட்டோவில், டிரைவர் சீட்டின் முதுகில் எழுதப்பட்ட வாசகம்.. 

‘உங்களின் வழிச் செலவு, எங்களின் வாழ்க்கை செலவு.’

இந்த வாசகம், இறங்கிய பின் யாரையும் பேரம் பேச விடாது. மீட்டருக்கு மேல் ஐந்து ரூபாய் போட்டுக் கொடுங்க சார் என்கிற வார்த்தைக்கும் இந்த வாசகத்திற்கு எத்தனை வேறுபாடு. அதனால் தான் சொல்கிறேன், சொல்லும் விதத்தில் வெல்லலாம்.

ஒரு மொத்த விற்பனை மீன் கடையில் எழுதப்பட்டிருந்த வாசகம்,

‘மீன் சாப்பிட வேண்டாம் என்று நினைத்தேன். மீனவன் சாப்பிட வேண்டாமா?’

வார்த்தைகளில் இல்லை வெற்றி. அது வெளிவரும் விதத்தில் தான் வெற்றி இருக்கிறது. 

டீக்கடையின் வரிகளும், ஆட்டோவில் எழுதப்பட்ட வரிகளும் ஒரே விஷயத்தை தான் சொல்கிறது. ஆனால் சொல்லப்பட்ட விதம் தான் அதில் வித்தியாசம். சொல்ல வந்ததை அழகாக சொல்வது ஒரு கலை.

நினைக்கும் விஷயங்களை எல்லாம் பேசாமல், அதை செம்மை படுத்தி பேசிப்பாருங்கள்.. வெற்றி நிச்சயம்.

ஒரு ஹோட்டலில் எழுதி மாட்டி இருக்கும் வாசகம்...
‘வீட்டு சமையலுக்கு ஒரு நாள் விடுமுறை விடுங்கள்.’

எண்ணங்கள் அழகானால் வார்த்தைகள் அழகாகும், வார்த்தைகள் அழகானால் சிந்தனைகள் அழகாகும், சிந்தனைகள் அழகானால் வாழ்க்கையே அழகாகும்..!!!
எந்த மனது நல்லது நினைக்கிறதோ, அந்த மனதிற்கு நல்லதே நடக்கும்.. எந்த மனிதன் மற்றவர்களும் நன்றாக இருக்க வேண்டுமென்று நினைக்கிறானோ, அந்த மனிதன் நன்றாகவே இருப்பான்.. இதை பின்பற்றினால் வாழ்க்கை சிறக்கும்..!!

நவதானிய தோசை...

தேவையான பொருட்கள்:
 
பாசிப்பயறு - கால் கப் 
 
கருப்பு உளுத்தம்பருப்பு - கால் கப் 
 
கொண்டைக்கடலை -கால் கப் 
 
பச்சரிசி -கால் கப் 
 
துவரம்பருப்பு -கால் கப் 
 
கொள்ளு -கால் கப் 
 
சோயா -கால் கப் 
 
வெள்ளை சோளம் -கால் கப் 
 
எள்ளு -ஒரு டேபிள்ஸ்பூன்

பச்சை மிளகாய் -3 
 
காய்ந்த மிளகாய் -6 
 
இஞ்சி -ஒரு துண்டு 
 
தேங்காய் துருவல் -ஒரு டேபிள்ஸ்பூன்
 
கறிவேப்பிலை -சிறிது 
 
பெருங்காயத்தூள் - 1/2 டீஸ்பூன் 
 
உப்பு - தேவையான அளவு 
 
எண்ணெய் - தேவையான அளவு 
 
கொத்துமல்லி -சிறிதளவு.

செய்முறை: 

எல்லா தானியங்களையும் ஒன்றாக போட்டு நன்றாகக் களைந்து சுமார் 5 மணி நேரம் ஊறவைக்கவும். 

ஊறிய பிறகு தானியங்கள், தேங்காய் துருவல், பச்சை மிளகாய், காய்ந்த மிளகாய், இஞ்சி, கறிவேப்பிலை, பெருங்காயம், உப்பு இவற்றைச் சேர்த்து நன்றாக அரைக்கவும். 

பொடியாக அரிந்த கொத்துமல்லியை சேர்த்து மெல்லிய தோசைகளாக வார்த்து எடுக்கவும். 

இஞ்சி சேர்ப்பதால் எளிதில்   ஜீரணமாகும்.

#பன்னீர் #தோசை...

#தேவையான #பொருட்கள்:

பச்சரிசி -ஒரு கப்

புழுங்கலரிசி -ஒரு கப் 

துருவிய பன்னீர் -ஒரு கப் 

பச்சை மிளகாய் -2 

உப்பு -தேவைக்கேற்ப 

பொடியாக அரிந்த கொத்துமல்லி -ஒரு டீஸ்பூன்

எண்ணெய் - தேவையான அளவு

#செய்முறை: 

பச்சரிசி, புழுங்கலரிசி இரண்டையும் சேர்த்து இரண்டு மணி நேரம் ஊறவைக்கவும்.
 
பன்னீரை துருவி வைத்துக்கொள்ளவும். பச்சை மிளகாயையும் கொத்துமல்லியையும் பொடியாக அரிந்து வைத்துக்கொள்ளவும். 

ஊறிய அரிசியை உப்பு சேர்த்து நைஸாக அரைக்கவும். 

பின்னர் அதனுடன் துருவிய பனீர், பச்சைமிளகாய், கொத்துமல்லி இவற்றைச் சேர்த்து, மாவை சிறிது தளர கலந்து, சிறிது கனமான தோசைகளாக வார்த்து எடுக்கவும். 

சோயாபனீர் சேர்த்தும் செய்யலாம். உடம்புக்கு மிகவும் நல்லது. புளிப்பு வேண்டியவர்கள் மாவை 5 மணி நேரம் புளிக்கவைத்து, பிறகு பனீர் சேர்த்துச் செய்யலாம். 

சூடாக சாப்பிட்டால் சுவை அதிகம்.